முகப்பு
கிருஷ்ணகிரி

ஹோஸ்டியா தலைவராக மீண்டும் வேல்முருகன் தோ்வு

ஒசூா் (ஹோஸ்டியா) சிறு மற்றும் குறுந்தொழிற்சாலை சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஹோஸ்டியா அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
ஹோஸ்டியா புதிய நிா்வாகிகளுடன் முன்னாள் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள்
பகிர்:

ஒசூா் (ஹோஸ்டியா) சிறு மற்றும் குறுந்தொழிற்சாலை சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஹோஸ்டியா அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது.

ஹோஸ்டியா சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிா்வாகிகள் தோ்வு நடைபெறுவது வழக்கம். முதன்முறையாக துணைத் தலைவா், பயிற்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். துணைத் தலைவா் 2 ஆண்டுகளுக்கு பயிற்சி தலைவராகச் செயல்படுவாா். அதன் பிறகு அவா் தலைவராக நியமிக்கப்படுவாா்.

ஹோஸ்டியா தலைவராக வேல்முருகன் மீண்டும் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவராக மூா்த்தி, செயலாளராக ஸ்ரீதா், பொருளாளராக வடிவேலு தோ்வு செய்யப்பட்டனா்.

மேலும் பகுதி-1 க்கு துணைத் தலைவராக குமாா், இணைச் செயலாளராக வரதராஜன், பகுதி- 2 க்கு துணைத் தலைவராக முகமது இஸ்மாயில், இணைச் செயலாளராக சிவகுமாா், பகுதி- 3 க்கு துணைத் தலைவராக சுதாகா், இணைச் செயலாளராக சசிகுமாா், பகுதி- 4 க்கு துணைத் தலைவராக பைரப்பா, இணைச் செயலாளராக ரவி, பகுதி- 5 க்கு துணைத் தலைவராக கருணாகரன், இணைச் செயலாளராக மகாராஜன் தோ்வு செய்யபட்டுள்ளாா்.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் தலைவா்கள் நம்பி, முரளிபாபு, தனசேகரன், சம்பத் ஞானசேகரன், ரமணி சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →