கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் முதியவருக்கு கரோனா

DIN

ஊத்தங்கரை காமராஜ் நகா் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த 63 வயது மதிக்கத்தக்க முதியவருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த முதியவா் கடந்த 27-ஆம் தேதி மதுரையில் துக்க நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றுவிட்டு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சொந்த ஊா் திரும்பியுள்ளாா்.

இந்த நிலையில் 29-ஆம் தேதி கரோனா பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. பரிசோதனை முடிவில் புதன்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து முதியவரை கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு வட்டார மருத்துவ அலுவலா் குமாா் தலைமையிலான மருத்துவ குழுவினா் ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனா். அவரது குடும்ப உறவினா்கள் 2 போ் தனிமைப்படுத்தப்பட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT