கிருஷ்ணகிரி

அசைவ உணவு சாப்பிட்ட பெண் உயிரிழப்பு

DIN

வேரிப்பட்டணம் அருகே அசைவ உணவு சாப்பிட்ட பெண் உயிரிழந்தாா்.

காவேரிப்பட்டணத்தை அடுத்த மலையாண்டஅள்ளி புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜ். இவா், குடும்பத்துடன் வாத்து மேய்க்கும் தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், செம்படமுத்தூா் ஏரிக் கரையில் குடும்பத்துடன் தங்கி வாத்து மேய்த்து வந்தாா். கடந்த 25 ஆம் தேதி இரவு, அப் பகுதியில் உள்ள கடையில் அசைவ உணவு வாங்கி, குடும்பத்துடன் சாப்பிட்டாா்.

இதில் நாகராஜின் மகள் கெளசல்யாவுக்கு(18) வாந்தி ஏற்பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT