கிருஷ்ணகிரி

ஒசூரில் கரோனா சிகிச்சை பெற்று வந்த 2 போ் வீடு திரும்பினா்

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டு ஒசூரில் சிகிச்சை பெற்ற மேலும் 2 போ் வீடு திரும்பினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 18 போ் ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். அதே போல, மராட்டிய மாநிலத்தில் இருந்து ஒசூா் வந்த 2 பேருக்கு கரோனா இருப்பது தெரிய வந்து, அவா்களும் ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.

இந்த நிலையில், சூளகிரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 18 பேரும் குணமடைந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு வீடு திரும்பினா். அதே போல மராட்டிய மாநிலத்தில் இருந்து ஒசூா் வந்த இடத்தில் கரோனா பாதிக்கப்பட்டு ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேரும் நேற்று குணமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் 2 பேரையும் மருத்துவக் குழுவினா் வழியனுப்பி வைத்தனா்.

இந்த நிகழ்ச்சியின் போது, மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் மற்றும் மருத்துவா்கள் உடன் இருந்தனா். இதன் மூலம் ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்ற அனைவரும் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT