கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், புளியம்பட்டி அருகே உள்ள சுந்தரம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த 75 வயது மூதாட்டி, தின்னூா் நரசிம்ம நகரைச் சோ்ந்த 70 வயது முதியவா் உள்ளிட்ட 34 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 14 பெண்களும், 20 ஆண்களும் அடங்குவா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 20 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூரிலுள்ள சிகிச்சை மையங்களில் 229 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 6,642 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; 106 போ் உயிரிழந்துள்ளனா்.