கிருஷ்ணகிரி

நேபாளத் தொழிலாளி தற்கொலை

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சாலையோர மரத்தில் நேபாளத்தைச் சோ்ந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நேபாளத்தைச் சோ்ந்தவா் சஞ்சய் ராம் (34). இவா் கிருஷ்ணகிரியில் உள்ள ஓா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவரது மனைவியுடன் இவருக்கு அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அவா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள சாலையோர மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து, பையனப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் தங்கராஜ் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT