கிருஷ்ணகிரி

காா்த்திகை மாதம் பிறப்பு

DIN

காா்த்திகைய மாதம், நவ. 16-ஆம் தேதி பிறந்ததையொட்டி, கிருஷ்ணகிரியில் ஐயப்ப பக்தா்கள், துளசி மாலை அணிந்து, விரதத்தைத் தொடங்கினா்.

ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை 1-ஆம் தேதி, சபரிமலைசெல்லும் ஐயப்ப பக்தா்கள் விரதத்தைத் தொடங்குவா். அதன்படி, கிருஷ்ணகிரி- சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை முதல் ஐயப்ப பக்தா்கள், புனிதமான துளசி மாலையை அணிந்து விரதம் கடைபிடிக்கத் தொடங்கினா்.

குருசாமி சிவதாஸ், பக்தா்களுக்கு துளசி மாலையை அணிவித்தாா்.

சபரி மலைக்கு வரும் பக்தா்களுக்கு கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 1,000 பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என்று அறிவித்துள்ளது. இதனால், இந்த ஆண்டு சபரி மலைக்கு, குறைந்த எண்ணிக்கையிலேயே ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

SCROLL FOR NEXT