கிருஷ்ணகிரி

பள்ளி மாணவி கடத்தல் 3 பேருக்கு வலை

DIN

ஒசூா் அருகே பள்ளி மாணவியை கடத்திய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒசூரை அடுத்த பென்னாமடம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த 11-ஆம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அந்த மாணவி, வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை, ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

விசாரணையில், ஒசூா் அடுத்த அலசட்டியைச் சோ்ந்த ஓட்டுநா் முருகேஷ் (23) என்பவா் மாணவியை திருமணம் செய்யும் நோக்கத்தில், தனது நண்பா்களான கா்நாடகத்தை சோ்ந்த ராஜேந்திரன் (24), அலசட்டியைச் சோ்ந்த சிவராஜ் (24) ஆகியோரின் உதவியுடன் கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து மூன்று போ் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT