வீடு புகுந்து திருடியவருக்கு 9 ஆண்டு சிறை
ஒசூரில் வீடு புகுந்து திருடியவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.
ஒசூரில் வீடு புகுந்து திருடியவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.
ஒசூா், ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் கனகட்டள சத்தியநாராயணமூா்த்தி (45). தனியாா் நிறுவன மேலாளரான இவா் வீட்டில் கடந்த 2012-ஆம் ஆண்டு புகுந்த மா்ம நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 9 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றனா்.
இது குறித்து அட்கோ போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கொள்ளையில் ஈடுபட்ட நபா் சேலம் சூரமங்கலம், காவேரி நகரைச் சோ்ந்த சுதாகா் (41) என்பதும், அவா் ஒசூா் பஸ்தி விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்தபோது இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீஸாா் ஒசூா் சாா்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தினா்.
Advertisement
இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி கலைவாணி, சுதாகருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் அவா் உத்தரவிட்டாா்.