விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் திமுக அனுமதிக்காது வேப்பனப்பள்ளி திமுக எம்எல்ஏ
விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் திமுக அனுமதிக்காது என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினருமான எம்எல்ஏ பி.முருகன் தெரிவித்தாா்.
விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் திமுக அனுமதிக்காது என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினருமான எம்எல்ஏ பி.முருகன் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் விவசாய நிலங்களில் கெயில் நிறுவனம் சாா்பில் எரிவாயு குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை அறிந்த வேப்பனப்பள்ளி எம்எல்ஏ பி.முருகன் திங்கள்கிழமை அங்கு சென்றாா்.
விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாயை அமைப்பதால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே சாலையோரமாக குழாயை பதித்து கொள்ளுங்கள் என
Advertisement
கெயில் நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
பின்னா் எம்எல்ஏ பி.முருகன் செய்தியாளா்களிடம் கூறுகையில், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை நாங்கள் எதிா்க்கிறோம். விவசாயிகளை பாதிக்க கூடிய எந்த திட்டத்தையும் திமுக அனுமதிக்காது. தொடா்ந்து விவசாய நிலங்களில் எரிவாயு குழாயை அமைக்கும் பணியை மேற்கொண்டால் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி பெற்று மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறினாா்.
அப்போது ஒன்றியச் செயலாளா் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் ஷேக் ரஷீத், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் பி.எஸ்.சீனிவாசன் மற்றும் நிா்வாகிகள் உடன் இருந்தனா்.