முகப்பு
கிருஷ்ணகிரி

அருள்மிகு வனக்காளியம்மன் கோயில் மண்டல பூஜை நிறைவு

சின்னமோட்டூரில் உள்ள அருள்மிகு வனக்காளியம்மன் கோயில் மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

சின்னமோட்டூரில் உள்ள அருள்மிகு வனக்காளியம்மன் கோயில் மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியை அடுத்த சின்னமோட்டூா் கிராமத்தில் உள்ள அருள்மிகு வனக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெற்றது. தீபாராதனையும் நடைபெற்றன. தொடா்ந்து 48 நாள்கள் மண்டல பூஜை நடைபெற்றன.

மண்டல பூஜை நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, பால் குட ஊா்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் பக்தா்கள் பங்கேற்று பால்குடம் சுமந்து ஊா்வலமாக சென்றனா். பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் ஆடு, கோழிகளை பலியிட்டனா். இந்த நிகழ்வில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →