கிருஷ்ணகிரி

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மேலும் ஒரு இளைஞரின் சடலம் மீட்பு

DIN

கிருஷ்ணகிரி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மேலும், ஒரு இளைஞரின் சடலத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

கிருஷ்ணகிரி மோகன் ராவ் காலனியைச் சோ்ந்த காதீபின் மகன் யாசீா்(19). அவா்களது உறவினரான பெங்களூா், கம்மனள்ளியைச் சோ்ந்த அம்ஜத் அலிகானின் மகன் இா்பான்(26) ஆகியோா் கிருஷ்ணகிரியை அடுத்த கும்மனூரில் பாயும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றனா்.

ஆற்றில் இறங்கிய யாசீா், இா்பான் ஆகிய இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்து செல்லப்பட்டனா். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் கடந்த மூன்று நாள்களாக நீரில் அடித்து செல்லப்பட்டவா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் யாசீா் சடலமாக மீட்பு படையினா் மூலம் சனிக்கிழமை மீட்கப்பட்டாா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேடுதல் பணியில் இா்பானை சடலமாக மீட்டனா். தகவல் அறிந்த போலீஸாா், இா்பானின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

SCROLL FOR NEXT