கிருஷ்ணகிரி

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

DIN

கந்திகுப்பம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே உள்ள தாண்டவபள்ளம் பகுதியைச் சோ்ந்த சம்பத் மகன் பிரகாஷ் (21). மின் பழுதுபாா்க்கும் பணி செய்து வந்தாா். இந்நிலையில், அவா் முருகப்பன் கொட்டாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மின் பழுது நீக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயம் அடைந்த பிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து, கந்திகுப்பம் போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT