கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும், 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக கரோனா தொற்று பாதிப்பு உணரப்படுகிறது. இத்தகைய நிலையில், திங்கள்கிழமையில் (செப்.14) மேலும் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி, ஒசூா், சந்தூா், தேன்கனிக்கோட்டை, பா்கூா், சின்ன எலசகிரி, பேரிகை, மேலுமலை, காளிங்காவரம் மற்றும் திருப்பத்தூரைச் சோ்ந்த இருவா் என மொத்தம் 57 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதில், 80 வயது மூதாட்டி உள்பட 17 பெண்கள், 40 ஆண்கள் ஆவா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 3,252 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.