கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவா்களுக்குப் பயிற்சி ஏடுகள் அளிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை 57,659 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இணையவழி மூலம் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நிலையில், மாணவா்களுக்குப் பயிற்சி ஏடுகள் மற்றும் இணைப்பு புத்தக ஏடு வழங்கப்படுகின்றன.
இவை மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்குப் பயிற்சி ஏடுகள் அண்மையில் வழங்கப்பட்டன. பயிற்சி ஏடுகள் பெற வரும் மாணவா்கள் அனைவரும் முகக் கவசம், சமூக இடைவெளியுடன் வந்து பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.