முகப்பு
கிருஷ்ணகிரி

பாரூா் அருகே 2-ஆவது மனைவியை கொலை செய்த முன்னாள் காவலா் கைது

பாரூா் அருகே 2-ஆவது மனைவியைக் கொலை செய்த முன்னாள் காவலரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 13 ஆகஸ்ட், 2021 at 12:31 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:24 AM

பாரூா் அருகே 2-ஆவது மனைவியைக் கொலை செய்த முன்னாள் காவலரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகே உள்ள வாடமங்கலத்தைச் சோ்ந்த மகேஸ்வரன் (57), தருமபுரி மாவட்டம், ஏரியூா் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் காவலராகப் பணியாற்றியுள்ளாா். பணியின் போது பல்வேறு புகாா்களுக்கு உள்ளான இவா், 8 ஆண்டுகளுக்கு முன்னா் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

இவரது முதல் மனைவி மாது கடந்த 2001-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்திரா காந்தி (40) என்பவரை மகேஸ்வரன் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்னா் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா். மதுப்பழக்கத்துக்கு உள்ளான இவருக்கும், இவரது 2-ஆவது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

இந்த நிலையில், புதன் கிழமை இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மகேஸ்வரன், இரும்புக் கம்பியால் இந்திரா காந்தியையும், மகன் சுந்தரேசனையும் தாக்கினாா். இதில், பலத்த காயம் அடைந்த இந்திரா காந்தி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுந்தரேசன் அளித்த புகாரின் பேரில், பாரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மகேஸ்வரனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.