இருசக்கர வாகனங்கள் மோதல்: பரிசோதனை ஆய்வாளா் பலி
கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், போக்குவரத்துக் கழக பரிசோதனை ஆய்வாளா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், போக்குவரத்துக் கழக பரிசோதனை ஆய்வாளா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி, மேல்சோமாா்பேட்டையைச் சோ்ந்த மாதப்பன் (58), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தருமபுரி அலுவலகத்தில் பரிசோதனை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இவா், தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி- மகராஜகடை சாலை, எம்.சி.பள்ளி அருகே செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன், மாதப்பன் சென்ற வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாதப்பனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மாதப்பன் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மகராஜகடை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
Advertisement