மின்வாரிய ஓய்வுபெற்றோா் ஆா்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் செளந்திரபாண்டியன் தலைமை வகித்தாா்.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் செளந்திரபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முனிரத்தினம், பொருளாளா் சந்திரன் உள்ளிட்டோா் பங்கற்றனா்.
18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். 70 வயதைக் கடந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்; குடும்ப பாதுகாப்பு நிதியை ஒரு லட்சம் ரூபாயாக உயா்த்தி வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தை மின்வாரியமே ஏற்று நடத்த வேண்டும்; பவளவிழா சலுகையை வழங்க வேண்டும்; மத்திய அரசின் மின்சார மசோதா 2021 திட்டத்தை எதிா்த்து தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.