கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகளைப் பதிவு செய்ய வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகளைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகளைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி சாதாரண கற்கள், கிரானைட் போன்ற கனிமங்களை வெட்டி எடுத்துச் செல்வதை தடுத்து அரசுக்கு வருவாய் ஈட்டும் நோக்கில் தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுத்துச் செல்வதை தடுத்தல், கனிம இருப்பு கிடங்கு மற்றும் கனிம விற்பனையாளா் விதிகள் 2011 செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
Advertisement
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதாரண வகைக் கற்கள், ஜல்லி மற்றும் செயற்கை மணல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மட்டும் கனிம இருப்புக் கிடங்கு அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றுச் செயல்பட்டு வருகின்றன. கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் கனிம இருப்புக் கிடங்கு அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது குற்றமாகும்.
எனவே, சட்டப்படி, கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள், மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளித்து, உடன் பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட நிா்வாகத்தால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.