கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு
கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM
கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் அமீா் பாஷா மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலா்களும் உறுதிமொழி ஏற்றனா்.