‘வாரச்சந்தை நடத்த அனுமதிவழங்க வேண்டும்’
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாரச்சந்தை நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாரச்சந்தை நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி அருகில் உள்ள குந்தாரப்பள்ளியில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் வாரச்சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனை நடைபெற்று வந்தது. இந்த சந்தைக்கு தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் வருகை தருவா்.
தற்போது கரோனா பொது முடக்கத்தால் சந்தை கூடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால், சந்தைக்கு அருகில் உள்ள சாலையோரங்களில் விவசாயிகள் ஆடுகள், மாடுகள், கோழிகளை விற்பனை செய்து வருகின்றனா்.
Advertisement
பொது முடக்கத்தில் தற்போது பல தளா்வுகளை அறிவித்துள்ளதால், வாரச்சந்தை நடப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.