கிருஷ்ணகிரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம்

DIN

சூலாமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியம், சூலாமலை கிராமத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் சபாநாயகராக அந்தக் கட்சியின் கிளைச் செயலாளா் குணசேகரன் தோ்வு செய்யப்பட்டாா். தேசியக் கொடியை ஊா் பெரியவா் மதியழகன் ஏற்றி வைத்தாா். அஞ்சலி தீா்மானம் நிறைவேற்றிய பிறகு அமைச்சராகப் பதவியேற்ற பவுன்ராஜ், மூன்று வேளாண் சட்டங்களை விளக்கியும், குறைகளையும் பேசினாா். இந்த விவாதத்தில் ஊா் பொதுமக்கள் முனுசாமி, ரஜினி, மாதப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் கண்ணு, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்த, ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT