மின்மாற்றியின் உதிரிப் பாகங்கள் திருட்டு
மகராஜகடை அருகே மின்மாற்றியின் உதிரிப் பாகங்களைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:56 AM
மகராஜகடை அருகே மின்மாற்றியின் உதிரிப் பாகங்களைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மகராஜகடை அருகே உள்ளது கோதிகுட்லப்பள்ளி கிராமம். இக் கிராமத்தில் உள்ள மின்மாற்றியிலிருந்த ரூ. 1.12 லட்சம் மதிப்பிலான மோட்டாா் உள்ளிட்ட உதிரிப் பாகங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து, மின்வாரிய உதவி பொறியாளா் லட்சுமணன் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில் மகராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement