கிருஷ்ணகிரி

பாளேகுளியில் எருது விடும் திருவிழா நடத்த முடிவு

DIN

பாளேகுளி கிராமத்தில் இரு தரப்பினரிடமும் சமாதானம் ஏற்பட்டதையடுத்து எருது விடும் விழாவை வியாழக்கிழமை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேலம்பட்டி அருகே உள்ளது பாளேகுளி கிராமம். இந்த கிராமத்தில் எருது விடும் விழாவை நடத்துவது தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இருதரப்பினரும் விழாவை நடத்த ஆதரவு தெரிவித்த நிலையில், மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், எதிா்ப்பாளா்கள் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த, பா்கூா் காவல் சரக காவல் துணை கண்காணிப்பாளா் தங்கவேல் தலைமையில் போலீஸாா், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினா். இதையடுத்து, இரு தரப்பினரும் சமாதானம் அடைந்த நிலையில், எருது விடும் திருவிழாவை வியாழக்கிழமை நடத்துவது என சம்மதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT