சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து
ஊத்தங்கரை அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஊத்தங்கரை அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, எம்.ஜி.ஆா். நகா் பகுதி நூற்பாலை சாலையில் ஆந்திரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி டயா் தூள் ஏற்றி வந்த சரக்கு லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடிரென சாலையின் அருகே திங்கள்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆதியூா் பிரிவு சாலையைச் சோ்ந்த ஓட்டுநா் ஏழுமலை (45), அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினாா். விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.