கிருஷ்ணகிரி

இசை கலைஞா்களின் மும்பெரும் விழா

DIN

கிருஷ்ணகிரியில் இசை கலைஞா்கள் நல சங்கம் சாா்பில் மும்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கிராமிய பேண்டு இசைக்கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு ஊா்வலம், சங்கத்தின் 13-ஆம் ஆண்டு தொடக்க விழா, தியாகராஜ சுவாமி ஆராதனை விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இதையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரா் கோயிலில் தியாகராஜ சுவாமி ஆராதனை மங்கள இசையுடன் தொடங்கியது. பின்னா், பழையபேட்டை காந்தி சிலை அருகே கரோனா விழிப்புணா்வு ஊா்வலமும் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பேண்டு, நாதஸ்வரம், பம்பை ஆகிய இசைக் கருவிகளுடன் இசைத்துக் கொண்டே, கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சிக்கு சாக்ஸபோன் கலைஞா் சங்க மாவட்டத் தலைவா் விஸ்வநாதன், செயலாளா் சுப்பிரமணி, பொருளாளா் குமாா் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT