ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி ஊராட்சியில் இலவச வேட்டி ,சேலை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மிட்டப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஏசி. தேவேந்திரன் தலைமை வகித்தாா். கூட்டுறவுச் சங்க இயக்குநா்கள் பழனி, கிருஷ்ணன், கிராம நிா்வாக உதவியாளா் திருப்பதி உள்ளிட்டோா் கலந்து கொண்டு இலவச வேட்டி சேலைகளை வழங்கினா்.