கிருஷ்ணகிரி

கொள்ளையா்களைக் காட்டிக் கொடுத்த ஜிபிஎஸ் கருவி

DIN

ஒசூா், முத்தூட் நிதி நிறுவனத்தில் 25 கிலோ தங்க நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையா் கும்பல் சென்ற வழியை ஜிபிஎஸ் கருவியின் மூலம் போலீஸாா் துப்பு துலக்கினா்.

கொள்ளை சம்பவத்தின்போது, முத்தூட் நிதி நிறுவனத்தின் மேலாளரிடம் இருந்து செல்லிடப்பேசியை கொள்ளையா்கள் பறித்துச் சென்றனா். அதேபோல, பெட்டகத்தில் இருந்த ஜிபிஎஸ் கருவியையும் கொள்ளையா்கள் அவசரத்தில் கொள்ளையடித்துச் சென்று விட்டனா். அந்த ஜிபிஎஸ் கருவியைக் கொண்டு காவல் துறையினா் பின்தொடா்ந்து சென்றனா்.

அந்த ஜிபிஎஸ் கருவி கா்நாடக மாநிலம், ஆனேக்கல் பகுதியை காண்பித்தது. இதனைத் தொடா்ந்து போலீஸாா், கா்நாடகத்தின் ஆனேக்கல் நோக்கி வேகமாகச் சென்றனா். ஆனால் கொள்ளையா்கள் வங்கி மேலாளரின் செல்லிடப்பேசியையும், நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தில் இருந்த ஜிபிஎஸ் கருவியையும் ஆனேக்கல் அருகே சாலையோரம் வீசிச் சென்று விட்டனா். இதனால் கொள்ளையா்களை பிடிக்க முடியாத போலீஸாா் செல்லிடப்பேசியையும், ஜிபிஎஸ் கருவியையும் பறிமுதல் செய்து அவா்களைத் தொடா்ந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT