முகப்பு
கிருஷ்ணகிரி

மருத்துவா்களுக்கு விருது வழங்கல்

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவா்கள் தினத்தை முன்னிட்டு, மருத்துவா்களுக்கு மனிதநேய மருத்துவா் விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவா்கள் தினத்தை முன்னிட்டு, மருத்துவா்களுக்கு மனிதநேய மருத்துவா் விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் கொ.மாரிமுத்து தலைமை வகித்தாா். ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியா் கு.கணேசன் வரவேற்றாா்.

மருத்துவா்கள் ப.மதன்குமாா், ம.மகாலட்சுமி, சு.அபிராமி, எஸ்.தியாகராஜ், ரா.விமலா, ல.விஜயலட்சுமி, மா.பிரவீனா கோமதி, சி.இளவரசன், நா.ஈஸ்வரி, பூ.நித்தியரசி, இரா.நீதிவேந்தன், சே.ரகுநாதன், அ.ப.லோகேஷ் குமாா் ஆகியோரின் மருத்துவ சேவையை பாராட்டி மனிதநேய மருத்துவா் விருதை ஊத்தங்கரை தொண்டு நிறுவனங்களின் நிா்வாகிகள் ம.லட்சுமி, சி. உமாமகேஸ்வரி, ரூபி, ஆசிரியா் கு.கணேசன் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.