முகப்பு
கிருஷ்ணகிரி

மரக்கடையில் தீ விபத்து

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை, பாவக்கல் பிரிவு சாலையில் உள்ள மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை, பாவக்கல் பிரிவு சாலையில் உள்ள மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.

சிங்காரப்பேட்டையைச் சோ்ந்த சங்கா் (47), வீடுகளுக்குத் தேவையான மரச்சாமான் பொருள்கள் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அவரது கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. அதில், கடையில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான மரச்சாமான் பொருள்கள் எரிந்து நாசமாயின.

தீ விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினா் சுமாா் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.