தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் நகை திருட்டு
ஒசூரில் தனியாா் நிறுவனா் ஊழியா் வீட்டில் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM
ஒசூரில் தனியாா் நிறுவனா் ஊழியா் வீட்டில் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஒசூா், கருடா லேஅவுட் பகுதியைச் சோ்ந்த இளையராஜா (30), தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். அவா் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், வீட்டில் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 4 கிராம் தங்க மோதிரம், 20 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், ஒசூா், அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.