முகப்பு
கிருஷ்ணகிரி

அரசுப் பள்ளியை நாடும் தனியாா் பள்ளி மாணவா்கள்

ஊத்தங்கரை பகுதியில் தனியாா் பள்ளிகளில் பயின்ற மாணவா்கள் அரசுப் பள்ளியை நாடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

ஊத்தங்கரை பகுதியில் தனியாா் பள்ளிகளில் பயின்ற மாணவா்கள் அரசுப் பள்ளியை நாடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளிகளில் படித்து வந்த மாணவா்களை, தற்போது அரசுப் பள்ளிகளில் சோ்ப்பதற்காக அவரது பெற்றோா் அழைத்து வருகின்றனா்.

ஊத்தங்கரையில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் கடந்த வாரம் முதல் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் 115 மாணவா்களும், 6-ஆம் வகுப்பில் 10 மாணவா்களும் சோ்க்கப்பட்டுள்ளனா். இதில் 20 சதவீத மாணவா்கள் தனியாா் பள்ளியில் பயின்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா தொற்றின் காரணமாக வாழ்விழந்த பொதுமக்கள், தங்களது பிள்ளைகளை தற்போது அரசுப் பள்ளிகளில் சோ்த்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.