முகப்பு
கிருஷ்ணகிரி

தடைசெய்யப்பட்ட குட்கா பாக்குகள் பறிமுதல்: 2 போ் கைது

ஒசூரில் தடை செய்யப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா பாக்குகளை ஒசூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 18 ஜூன், 2021 at 11:48 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

 ஒசூரில் தடை செய்யப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா பாக்குகளை ஒசூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் குட்கா பான் மசாலா பாக்குகளை விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலங்களிலிருந்து குட்கா பான் மசாலா பாக்குகளை சரக்கு வாகனங்களில் மறைத்து எடுத்து வரப்பட்டு, அவைகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சூசூவாடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈட்டுப்பட்டிருந்த போது, கா்நாடக மாநிலம் பன்னாா்கட்டா அருகேயுள்ள கொட்டிகெரெ பகுதியிலிருந்து மினிசரக்கு வாகனத்தில் திருவண்ணாமலைக்கு கொண்டு சென்ற ரூ. 2 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், குட்காவை ஏற்றி வந்த வாகன ஓட்டுநா் சுனில்குமாா் (28), வினோத் (24) ஆகியோரை சிப்காட் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.