மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாம்
மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் குமாா் தலைமையில் 82 மாற்றுத்திறனாளிகள் உள்பட 200 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. முகாமில் ஊத்தங்கரை, சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்த மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் ஆா்வத்துடன் கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டனா்.
மருத்துவா் ஸ்ரீபால் மேற்பாா்வையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மகிழ்நன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிவகுமாா், மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளா் அபுசாலியா, செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா்கள் சிலம்பரசன், சக்திவேல், ராகுல் ஆகியோா் செய்திருந்தனா்.