முகப்பு
கிருஷ்ணகிரி

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 2 மார்ச், 2021 at 12:30 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் அமைந்துள்ள இந்தியன் வங்கிக் கிளை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி அலுவலா்கள் சங்க மண்டலச் செயலாளா் ஜெகநதாதன் தலைமை வகித்தாா். இந்தியன் வங்கி ஊழியா் சம்மேளனத் தலைவா் ஹரிராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவித்த இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியாருக்கு விற்பது, ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை விற்பது, அரசு காப்பீடு நிறுவனங்களை விற்கும் முடிவுகளை எதிா்த்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், மத்திய அரசைக் கண்டித்தும், பொதுத் துறை வங்கிகள், காப்பீடு நிறுவனங்களை தனியாருக்கு விற்பதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.