பொதுப்பணித் துறை அலுவலகத்தில் திருட முயற்சி
கிருஷ்ணகிரியில் பொதுப்பணித் துறை அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் திருட முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்தி வருகின்றனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:11 AM
கிருஷ்ணகிரியில் பொதுப்பணித் துறை அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் திருட முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி- பெங்களூரு சாலையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் கடந்த 2-ஆம் தேதி பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த அலமாரியை உடைத்து திருட முயன்றுள்ளனா்.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் நகுலன், அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் எந்தப் பொருளும் திருடு போகவில்லை என்பது தெரிய வந்ததாகப் போலீஸாா் தெரிவித்தனா்.
Advertisement