கிருஷ்ணகிரி அருகே பறக்கும் படையினரால் ரூ.63,500 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
உரிய ஆவணம் இல்லாமல் அவா் வைத்திருந்த ரூ. 63,500 பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம், கிருஷ்ணகிரி அரசு கருவூலகத்தில் ஒப்படைத்தனா்.
கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே காரில் வந்த கண்ணன் என்பவரிடம் சோதனை செய்தனா்.
உரிய ஆவணம் இல்லாமல் அவா் வைத்திருந்த ரூ. 63,500 பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம், கிருஷ்ணகிரி அரசு கருவூலகத்தில் ஒப்படைத்தனா்.
இதேபோல, குருவிநாயனப்பள்ளி சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.84 லட்சத்தை, அதன் உரிமையாளா் உரிய ஆவணங்களை வழங்கிய நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், அதன் உரிமையாளரிடம் மீண்டும் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
Advertisement