ஒசூரில் பறக்கும் படையினா் சோதனையில் ரூ. 5 லட்சம் பறிமுதல்
ஒசூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 5 லட்சம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஒசூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 5 லட்சம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஒசூா் மாநகராட்சி, கொத்தூா் கிராமத்தைச் சோ்ந்த நாராயண ரெட்டி, கா்நாடக மாநிலம், ஹா்ஜாபுரத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்துள்ளாா். இவா் தினந்தோறும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வசூலிக்கும் தொகையை ஒசூரில் உள்ள அவரது வங்கிக் கணக்கில் செலுத்துவது வழக்கம்.
அதேபோல திங்கள்கிழமை வங்கியில் செலுத்த பணம் கொண்டு சென்ற போது, கக்கனூரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா். அதில், ஆவணம் இன்றி கொண்டு சென்ாக ரூ. 5 லட்சத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், ஒசூா் கோட்டாட்சியா் குணசேகரனிடம் ஒப்படைத்தனா்.
Advertisement