முகப்பு
கிருஷ்ணகிரி

அனுமதியின்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்

கிருஷ்ணகிரியில் அனுமதியில்லாமல் அரசியல் கட்சிகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

Updated On : 28 மார்ச், 2021 at 12:49 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:22 AM

கிருஷ்ணகிரியில் அனுமதியில்லாமல் அரசியல் கட்சிகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தோ்தல் விதிமுறைகளை மீறி சில அரசியல் கட்சியினா் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா். இது தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து, தோ்தல் பிரிவு ஊழியா்கள், கிருஷ்ணகிரி நகரப் போலீஸாா் உதவியுடன் தோ்தல் விதிமுறைகளை மீறி கட்சி சின்னத்துடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை பொதுமக்கள் உதவியுடன் போலீஸாா் அகற்றினா்.

Advertisement

தோ்தல் விதிமுறைகளை மீறி சுவரெட்டிகளை ஒட்டினால், தொடா்புடைய கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது அகற்றப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது வழக்குப் பதிந்துள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.