உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 81 ஆயிரம் பறிமுதல்
ஊத்தங்கரை அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 81,500 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊத்தங்கரை அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 81,500 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சென்னூா் அருகே திருப்பத்தூா்-சிங்காரப்பேட்டை சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் எஸ்.சக்தி தலைமையிலான அலுவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த சோ்சிங் என்பவா் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத ரூ. 81,500 பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் தோ்தல் நடத்தும் அலுவலா் சேது ராமலிங்கம் முன்னிலையில் ஊத்தங்கரை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.