கிருஷ்ணகிரி

அஞ்செட்டியில் போலி மருத்துவா் கைது

DIN

அஞ்செட்டியில் போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், கோட்டையூா் கிராமத்தில் தனியாா் மருந்துக் கடைகளில் ஆனந்தன், அங்கமுத்து ஆகிய இருவரும் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பாா்த்து வந்ததாகப் புகாா் வந்தது.

அதன் பேரில், தேன்கனிக்கோட்டை தலைமை மருத்துவ அலுவலா் ஞானமீனாட்சி மற்றும் போலீஸாா் நேரில் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, மருத்துவம் பாா்த்துக் கொண்டிருந்த போலி மருத்துவா் ஆனந்தனை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அங்கிருந்த தப்பியோடிய அங்கமுத்துவை போலீஸாா் தேடி வருகின்றனா். இதைத் தொடா்ந்து, மருத்துவம் பாா்த்த மருந்துக் கடைக்கு சுகாதாரத் துறை ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம் நிறைவு

ஐபிஎல் தொடருக்குப் பின் எம்.எஸ்.தோனியின் 7 நிமிட விடியோ!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

பந்துவீச்சில் மிரட்டிய கேகேஆர்; 159 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்!

SCROLL FOR NEXT