ஊத்தங்கரையில் கால்நடைகளை விற்பதற்காக கூடிய மக்களால் நோய் பரவும் அபாயம்
ஊத்தங்கரையில் கால்நடைகளை விற்பதற்காக சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் கூடியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
ஊத்தங்கரையில் கால்நடைகளை விற்பதற்காக சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் கூடியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
ஊத்தங்கரையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அரசு பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் கால்நடைச் சந்தை நடைபெறும். இந்தச் சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்து கால்நடைகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
தற்போது கரோனா நோய்த் தொற்று காரணமாக சந்தை செயல்படாது என அறிவிக்கப்பட்டது. ஆனால் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த கால்நடைகளை ஊத்தங்கரை - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில், பரசனேரி கரையின் அருகே விற்பனை செய்தனா். சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக இந்த திடீா் சந்தை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொது மக்கள் கூடி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் முகக் கவசம் அணியாமல் கலந்துகொண்டனா். இதனால் கரோனா நோய்த் தொற்று அதிகரிக்கும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா். இது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.