கிருஷ்ணகிரி

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார் சசிகலா: கே.பி.முனுசாமி

DIN

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயல்வதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கட்சியில் இல்லை. அதிமுவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் சசிகலா கருத்துகளை சொல்லி வருகிறார். 

இதற்காக ஒரு அதிமுக தொண்டர்கள் கூட செவி சாய்க்கமாட்டார்கள். ஒன்னரை கோடி அதிமுக தொண்டர்கள் இந்த இயக்கத்தை காத்து வருகின்றனர். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையை குழப்பத்தை ஏற்படுத்த இதுபோல் செய்து வருகின்றனர். அதிமுக எந்த தொண்டனும் சசிகலாவிடம் பேசவில்லை. 

மாறாக சசிகலாதான் போன் செய்து பேசுகிறார். சசிகலாவிடம் உள்ளவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலாவை துண்டிவிடுகின்றனர். அதனை சசிகலா அறிந்து கொள்ள வேண்டும். அம்மா ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால் சசிகலா அமைதியாக இருக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT