முகப்பு
கிருஷ்ணகிரி

தேசிய நெடுஞ்சாலையில் புகுந்த மழை வெள்ளம்: போக்குவரத்து பாதிப்பு

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை மேம்பாலம் அருகே, பெரிய தள்ளப்பாடி ஏரி, மற்றும் ஜவ்வாது மலையில் இருந்து வெளியேறும் உபரிநீரால் வெள்ளப்பெருக்கு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை மேம்பாலம் அருகே, பெரிய தள்ளப்பாடி ஏரி, மற்றும் ஜவ்வாது மலையில் இருந்து வெளியேறும் உபரிநீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் செல்வதால் சாலையைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை, பெங்களூரில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் வாகனங்கள், 30 கி.மீ. மேல், சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஊத்தங்கரையில் இருந்து திருப்பத்தூா் சென்று, அங்கிருந்து சிங்காரப்பேட்டை வழியாக திருவண்ணாமலை செல்கின்றனா். அரூா் பகுதியில் இருந்தும், பேருந்துகள் அம்மாபேட்டை வழியாகச் சென்று வருகின்றன. இதனால் ஊத்தங்கரையில் இருந்து செல்லும் பேருந்துகள், வாகனங்கள் 30 கி.மீ. தொலைவு, சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் செல்லும் நீா் வடிந்த பிறகுதான், இந்தச் சாலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.