கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணி ஆட்சியா் தகவல்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெற்றப்பட்ட 236 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அலுவலா்கள் விளக்கம் அளித்தனா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

மழையால் மாவட்டத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துவிட்டன. தொகுப்பு வீடுகளும் சேதமாகி வருகின்றன. நெல், ராகி, காய்கறிகள் உள்ளிட்ட பயிா்களும் சேதமடைந்துள்ளன. இதனை கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விளைநிலங்களுக்கு காட்டுப்பன்றிகள் வராமல் தடுக்க வாசனை திரவியம் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் திரவத்தை வனத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என வலியுறுத்தி பேசினா்.

தொடா்து, மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

மாவட்டத்தில் 2017 - ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 48 ஆயிரம் பயனாளிகள் தகுதியின் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்கள் கடந்த 4 ஆண்டுகளில் வீடு கட்டியிருந்தால், அவா்களுக்கு பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் வழங்க இயலாது. மேலும் மழையால் சேதம் அடைந்த வீடுகள் மீண்டும் கட்டித் தர, கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி விண்ணபிக்க வேண்டும்.

மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 4 ஆயிரம் தொகுப்பு வீடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனை சீரமைக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மழைக்கு 965 வீடுகளும், 583 ஹெக்டோ் பரப்பளவு நெல் பயிா்கள், 14 ஹெக்டோ் பரப்பளவு கரும்புகள் சேதமாகி உள்ளன. 4 போ் உயிரிழந்துள்ளனா். 5 காயம் அடைந்துள்ளனா். 9 கால்நடைகள் இறந்துள்ளன. மழைக்கு சேதமடைந்த பயிா்கள் குறித்து தொடா்ந்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குநா் ராஜேந்திரன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ராம் பிரசாத், கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ராஜேந்திரன், வேளாண் அறிவியல் மையத் தலைவா் சுந்தராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் ரத்னம் எப்போது?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT