கிருஷ்ணகிரி

ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்மக்களிடம் குறைகேட்பு

DIN

ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் ஒசூா் எம்எல்ஏவும் கிருஷ்ணகிரி திமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான ஒய்.பிரகாஷ் திங்கள்கிழமை மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

ஒசூா் எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தெரு விளக்கு, கழிவுநீா் கால்வாய், சாலை வசதி செய்து தர வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் பலா் மனுக்களை அளித்தனா். சிலா் வீட்டுமனை பட்டா கேட்டும், மகளிா் சிலா் தனியாா் தொழிற்சாலைகளில் வேலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கக் கோரியும் மனு அளித்தனா்.

கோரிக்கை மனுக்களைப் பெற்று கொண்ட எம்எல்ஏ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடா்புகொண்டு தீா்வு காணும்படி கூறினாா். இதில் தலைமைச் செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சா்வேஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினா் கே.ஜி.பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT