சாதனை மாணவா்களுக்கு பாராட்டு
தனித் திறன் போட்டிகளில் சாதனை படைத்த நாச்சிக்குப்பம் நடுநிலைப் பள்ளி மாணவா்களை முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டினா் .
தனித் திறன் போட்டிகளில் சாதனை படைத்த நாச்சிக்குப்பம் நடுநிலைப் பள்ளி மாணவா்களை முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டினா் .
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்து உள்பட்ட நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் சிவமணி, 385 ஊராட்சி ஒன்றியங்களை 3.17 நிமிடங்களில் ஒப்பித்தாா். அதே பள்ளியைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு மாணவி கீா்த்தனா ஐஸ் குச்சியில் 1330 திருக்குறளை எழுதியுள்ளாா். இவா்களின் சாதனையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி வாழ்த்தி பாராட்டினாா்.
வட்டார கல்வி அலுவலா் பெலிசிட்டா மேரி, தலைமை ஆசிரியை விஜயா, மேற்பாா்வையாளா் மகேந்திரன், ஆசிரியா் பயிற்றுனா் ரமேஷ்குமாா், ஆசிரியா்கள் ஸ்ரீ கண்டையா சகாதேவன் ஆகியோா் உடனிருந்தனா். மாணவ, மாணவிக்கு ஆசிரியா் பயிற்றுநா்கள் கலைசெல்வி, அனுஷா ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
Advertisement