பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பெரியாா் விருதுக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெரியாா் விருதுக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக நீதிக்காகப் பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெறுவோருக்கு ரூ. ஒரு லட்சம் விருது, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த விருதாளா் தமிழக முதல்வரால் தோ்வு செய்யப்படுகிறாா்.
Advertisement
2021-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரைத் தோ்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் ஆகிய தகுதிகளைப் பெற்றவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியானவா்கள் தங்களது விண்ணப்பத்தில் சுய விவரம், முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரங்கள், ஆவணங்களை இணைத்து கிருஷ்ணகிரி மாவட்ட
ஆட்சியா் அலுவலக அறை எண் 11-இல் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.