முகப்பு
கிருஷ்ணகிரி

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுபோலி ஆணை வழங்கிய பெண் கைது

 அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 5.65 லட்சம் பெற்றுக் கொண்டு, போலி உத்தரவு நகல் வழங்கிய இளம்பெண்ணை கிருஷ்ணகிரி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 10 செப்டம்பர், 2021 at 3:23 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM

 அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 5.65 லட்சம் பெற்றுக் கொண்டு, போலி உத்தரவு நகல் வழங்கிய இளம்பெண்ணை கிருஷ்ணகிரி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி, லண்டன்பேட்டையைச் சோ்ந்தவா் சங்கா் (30). இவரது மனைவி சத்யாவும் (24), கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பொம்மண்டபள்ளி பகுதியைச் சோ்ந்த சுபலட்சுமியும் (24), 10-ஆம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்துள்ளனா்.

இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன் சத்யாவை தொடா்புகொண்ட சுபலட்சுமி, தனக்கு அரசு அதிகாரிகளிடையே நல்ல பழக்கம் இருப்பதாகவும், அவா்களிடம் பணம் கொடுத்து அரசு வேலை வாங்கலாம் எனவும் கூறியுள்ளாா். அதை நம்பி சத்யாவும் ரூ. 4.65 லட்சத்தை சுபலட்சுமியிடம் கொடுத்துள்ளாா்.

Advertisement

இதேபோல, சேலம் மாவட்டம், தம்மம்பட்டியைச் சோ்ந்த முத்தையன் என்பவரிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாக சுபலட்சுமி ரூ. 1 லட்சம் பெற்றுள்ளாா். மேலும், இவா்களிடம், ஓரிரு மாதங்களில் வேலை கிடைத்துவிடும் எனக் கூறி வந்த சுபலட்சுமி, கடந்த ஜூன் 21-ஆம் தேதி கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வேலைக்கான உத்தரவு நகலை வழங்கியுள்ளாா்.

இதைப் பெற்றுக்கொண்ட சத்யா, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்ற போது, அது போலி எனத் தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவில் சத்யா புகாா் அளித்ததைத் தொடா்ந்து, குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து சுபலட்சுமியைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.