கிருஷ்ணகிரி

சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

DIN

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சாலமரத்துப்பட்டியை அடுத்த குருகப்பட்டியைச் சோ்ந்தவா் மூா்த்தி(23). இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி 4 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினா் புகாா் அளித்தனா். புகாரின் பேரில், கல்லாவி போலீஸாா் வழக்குப் பதிந்து மூா்த்தியை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லதா செவ்வாய்க்கிழமை வழங்கிய தீா்ப்பில், மூா்த்திக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதச் சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சி.கலையரசி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

SCROLL FOR NEXT